செய்திகள் :

ஏர் இந்தியா கருப்புப் பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறதா?

post image

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானத்தின் கருப்புப் பெட்டி, விசாரணைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டாது என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

விமான விபத்து விசாரணைக்காக அமைக்கப்பட்ட குழுவே கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து விசாரணை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமானங்களுக்கான உச்சி மாநாடு 2025-ல் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு,

விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறது என்பது வெறும் கணிப்பு மட்டுமே. தற்போது விமான விபத்தை விசாரிக்கும் பணியகத்தின் குழுவே இதனை ஆய்வு செய்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.

மேலும், கருப்புப் பெட்டியில் உள்ள காலவரிசை தரவுகள் எப்போது மீட்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு, இது முழுக்க தொழில்நுட்பம் சார்ந்தது. விசாரணைக் குழு சரியான நடைமுறைகளை பின்பற்றி ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின் முடிவில், விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் எனத் தெரிவித்தார்.

விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்து

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 270 பேர் பலியாகினர்.

இந்த விபத்துக்கான காரணம் விமானிகளா? தொழில்நுட்பக் கோளாறா? பறவைகள் மோதியது காரணமா? அல்லது வேறேதும் பிரச்னையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விபத்து பகுதியில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பெட்டியின் வெளிப்புறத்தில் அதிகளவில் சேதம் ஏற்பட்டிருப்பதால் தரவுகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க | “வாக்காளர்களின் ஓட்டுகள் திருடப்படுகின்றன” -ராகுல்: பின்னணியில் பாஜக?

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க