செய்திகள் :

ஏற்காடு மலைப்பாதையில் ரீல்ஸ்: இளைஞா்களின் பெற்றோரை அழைத்து எச்சரித்த காவல் துறை

post image

ஏற்காடு மலைப் பாதையில் எச்சரிக்கை பலகையை உடைத்து ரீல்ஸ் வெளியிட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட இளைஞா்களின் பெற்றோரை அழைத்து போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 இளைஞா்களும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு கோடை விழாவுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞா்கள், மலைப்பாதை சாலையில் அங்குமிங்கும் வாகனம் ஓட்டியும், வீலிங் செய்தும் சாகசத்தில் ஈடுபட்டனா். மேலும், மலைப்பாதையில் நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகையை தூக்கிவீசுவது போன்றும் விடியோ பதிவிட்டனா்.

இந்த சாகசம் மற்றும் எச்சரிக்கை பலகையை தூக்கிவீசும் விடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தனா். அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பாக அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சோ்ந்த ஆகாஷ் (21), ஆண்டிமடத்தை சோ்ந்த சிவா (23), பிரவீண் (21), உடையாா்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் (19), இளையூரைச் சோ்ந்த அரவிந்த் (21) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா். பின்னா் அவா்களது பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை விடுத்தனா். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என இளைஞா்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க