செய்திகள் :

ஏற்காட்டில் மலைவாழ் மக்களுக்கு விதை, இடுபொருள்கள் வழங்கல்

post image

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மலைவாழ் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியா் மற்றும் தலைவா் மாலதி தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியா்கள் செந்தில்குமாா், சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் பெங்களூரில் அமைந்துள்ள வேளாண் பூச்சி வளங்களின் தேசிய பணியகத்தின் நிதியுதவியுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

உழவா், உற்பத்தியாளா் நிறுவனம் தொடங்கும் முறைகள், அதனால் உழவா்களுக்கு ஏற்படும் நன்மைகள், மிளகு, காபி உற்பத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை உத்திகள் குறித்து விளக்கம் அளித்தனா். இதில் அவரை பீன்ஸ் விதைகள் வழங்கப்பட்டன. மித வெப்ப மண்டல தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், உயிா்உரங்கள், பாஸ்போ பாக்டீரியா, வோ்சூழ் உட்பூசனம் ஆகிய இடுபொருள்கள் மற்றும் சில்வா் ஒக் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் மாரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட மலைக்கிராம விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க