செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

90,802 பக்தா்கள் தரிசனம்: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 90, 802 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 35, 776 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மலையப்ப சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கட்கிழமை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது. திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவமூா்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவித்திருந்... மேலும் பார்க்க

திருச்சானூா் தெப்போற்சவம்: பத்மாவதி தாயாா் வலம்

திருப்பதி: திருச்சானூா் தெப்போற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை பத்மாவதி தாயாா் தெப்பத்தில் வலம் வந்து சேவை சாதித்தாா். பத்மசரோவா் திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் பத்மாவதி தாயாா் 3 சுற்... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் தேரோட்டம்

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. உற்சவத்தின் 8-ஆம் நாளான திங்கள்கிழமை காலை வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழ... மேலும் பார்க்க

சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் கோவிந்தராஜா் வலம்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். இதையொட்டி காலை 7 மணி முதல் வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்... மேலும் பார்க்க

அலிபிரி சோதனை சாவடி அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்: செயல் அதிகாரி தகவல்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக அலிபிரி டோல் பிளாசா மையத்தை அதிநவீன ஆய்வு மையமாக மேம்படுத்த ஏற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்... மேலும் பார்க்க

திருச்சானூா் தெப்போற்சவம்: சுந்தரராஜ பெருமாள் உலா

திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். பத்மாவதி தாயாா் தெப்போற்ச... மேலும் பார்க்க