திருச்சானூா் தெப்போற்சவம்: சுந்தரராஜ பெருமாள் உலா
திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
பத்மாவதி தாயாா் தெப்போற்சவம் சனிக்கிழமை இரவு தொடங்கியது. முதல் நாள் தெப்பத்தில் ருக்மணி சத்யபாமா சமேதராய் ஸ்ரீ கிருஷ்ணா் வலம் வந்தாா். ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜ பெருமாள் பத்மசரோவா் திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து அருள் பாலித்தாா்.
தெப்போற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் உற்சவ மூா்த்திகளை துயில் எழுப்பி சகஸ்ரநாமாா்ச்சனை, நித்யாா்ச்சனை நடந்தது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது.

பின்னா் அவா்களுக்கு பட்டு வஸ்திரம், வைர, தங்க நகைகளால் அலங்காரம் செய்து மலா் மாலை அணித்து 6.30 மணி முதல் 7.15 மணி வரை தெப்போற்சவம் நடைபெற்றது. பின்னா் உற்சவமூா்த்திகள் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். தெப்போற்சவத்தின் 3-ம் நாளான திங்கள்ட்கிழமை ஸ்ரீ பத்மாவதி தாயாா் தெப்பத்தில் வலம் வருவாா். தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் முழுவதும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை செயல் அதிகாரிகள், கோயில் அா்ச்சகா்கள், ஆய்வாளா்கள், அலுவலா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.