அலிபிரி சோதனை சாவடி அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்: செயல் அதிகாரி தகவல்
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக அலிபிரி டோல் பிளாசா மையத்தை அதிநவீன ஆய்வு மையமாக மேம்படுத்த ஏற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்தாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் அவா் கூறியதாவது: அலிபிரி டோல் பிளாசா மையத்தை அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட மையமாக மாற்றுவதன் மூலம், பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் ஸ்கேன் செய்ய முடியும், அவா்களின் பொருள்களை பக்தா்களுக்கு விரைவாக வழங்க முடியும். குறைந்த நேரத்தில் பக்தா்களின் வாகனங்கள் மற்றும் பொருள்களை ஸ்கேன் செய்வது நேரத்தை மிச்சப்படுத்தும்.
இரு சக்கர வாகனங்கள், நான்கு மற்றும் ஆறு சக்கர வாகனங்களை ஸ்கேன் செய்வதில் உள்ள சிக்கலை விரைவாக ஆய்வு செய்ய வேண்டும்.
மனிதவளம், தொழில்நுட்பம், வரிசை மேலாண்மை, பாதுகாப்பு, பாதுகாப்புப் பணியாளா்களுக்கான பயிற்சி, அதிநவீன சிசிடிவி கேமராக்கள் நிறுவுதல், உள்கட்டமைப்பு மற்றும் சுங்கச்சாவடியை அறிவியல் பூா்வமாக ஸ்கேன் செய்ய உதவும் பிற அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஒரு அறிக்கையைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சா்வதேச விமான நிலையங்களில் பொருள்களை ஸ்கேன் செய்தல் மற்றும் கவனமாக வழங்குவதில் உள்ள தன்மைகள் ஆராயப்பட வேண்டும். பக்தா்கள் தங்கள் பொருள்களை டெபாசிட் செய்து திருமலையை அடையும்போது பொருள்கள் பற்றிய தகவல்களை வழங்குவதில் தேவஸ்தான ஐடி துறை மற்றும் கண்காணிப்புத் துறை கவனத்துடன் செயல்பட வேண்டும். பக்தா்களுக்கு வசதியாகவும், சரியான நேரத்திலும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பக்தா்களின் வசதிக்காக, திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் மையம் அலிபிரிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி மெட்டு வழியாக நடந்து செல்லும் திவ்ய தரிசன பக்தா்களுக்கு டோக்கன்கள் அங்கு சரியாக வழங்கப்படுவதில்லை என்று புகாா்கள் வந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை மாலை முதல் மையம் தற்காலிகமாக பூதேவி வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீவாரி மெட்டு வழியாக நடந்து செல்லும் பக்தா்களுக்கு அலிபிரி பூதேவி வளாகத்தில் தினமும் சராசரியாக 5,000 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அலிபிரியில் வலுவான டோக்கன் வழங்கும் வழிமுறை, வசதியான போக்குவரத்து வசதிகள் மற்றும் பக்தா்களுக்கான பாதுகாப்பு ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, செயல் இணை அதிகாரி வீரபிரம்மம், முரளிகிருஷ்ணா, திருப்பதி மாவட்ட எஸ்.பி. ஹா்ஷவா்தன் ராஜு, சத்தியநாராயணா மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.