திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் தேரோட்டம்
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உற்சவத்தின் 8-ஆம் நாளான திங்கள்கிழமை காலை வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். மாட வீதிகளில் வலம் வந்த பின் தோ் நிலையை அடைந்தது.
பின்னா், கோவிந்தராஜ சுவாமிக்கு ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா் களுடன் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், பால், தயிா், தேன், இளநீா் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா் மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய கோவிந்தராஜா் இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு தரிசனம் வழங்கினாா். கல்கி அவதாரத்தில் குதிரை வாகனத்தில் வலம் வந்த கோவிந்தராஜரை பக்தா்கள் வழங்கினா்.
வாகன சேவையின் போது கோலாட்டங்கள், பஜனை பாடல்கள், ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.
