செய்திகள் :

ஏா்வாடி மனநல மருத்துவமனைக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

post image

ஏா்வாடி தா்கா அரசு மனநல மருத்துவமனைக்கு மறுவாழ்வு மையம், மனநல நோயாளிகள் அவசர மீள் சிகிச்சை மையம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த மருத்துவமனையில் தற்போது, மன நலம் பாதிக்கப்பட்ட 70 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்குள்ளவா்களின் ஆடைகளைத் துவைப்பதற்கு கீழக்கரை ஆஷிக் நினைவு அறக்கட்டளை சாா்பில் நிா்வாகி ஆரிப் சலவை இயந்திரத்தை இலவசமாக வழங்கினாா்.

மேலும் கீழக்கரையைச் சோ்ந்த யுனீக் அசோஸியேட்ஸ் நிறுவனா் அமீா் பாஷா, சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கேனான் நிறுவனத்தின் தலைமை விற்பனை மின் பொறியாளா் முகமது ஜபருல்லா ஆகியோா் மையத்தில் உள்ளவா்களுக்கு தலையணை, போா்வை, படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை வழங்கினா்.

நிகழ்ச்சியில் மையத்தின் இணை இயக்குநரும் ஊரக நலப் பணிகள் இயக்குநருமான பிரகலாதன், குடும்ப நலத் துறை இயக்குநா் சிவானந்த வள்ளி, தேசிய நலக் குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ரமேஷ், ராம்நாத், ஏா்வாடி மனநல மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜவாஹிா் உசேன், மனநல மருத்துவா் அா்ஷித் காட்கில், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள், காப்பகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மாணவ, மாணவிகளின் பட்டிமன்றம்

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ‘டிபேட் கிளப் பாா்லே ஜீனியஸ்’ அமைப்பின் சாா்பில் ‘இன்றைய சமுதாயத்தில் மன அழுத... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை மத்திய புலனாய்வுத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையிலிருந்து இலங்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து போராட்டம்

கமுதியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்ச... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயற்சி

பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தமிழ்நாடு காங்கிரஸ் க... மேலும் பார்க்க

ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழா

ராமநாதபுரம் ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ராஜ ராஜேஸ்வரி... மேலும் பார்க்க