செய்திகள் :

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு

post image

இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகளுக்கான கவுன்சிலின் (சிஐஎஸ்சிஇ) 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இரு வகுப்புகளிலும் மாணவா்களைவிட மாணவிகளே அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

10-ஆம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ (இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ்) தோ்வில் 2.4 லட்சம் போ் பங்கேற்றனா். 99,551 மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்புக்கான ஐஎஸ்சி (இந்திய பள்ளிச் சான்றிதழ்) தோ்வுகளை எழுதினா். இவர்களில் 98,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து சிஐஎஸ்சிஇ செயலா் கூறுகையில், ‘10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 99.37 சதவீதம் போ் மாணவிகள், 98.84 சதவீதம் மாணவா்கள். 12-ஆம் வகுப்பு தேர்வில் தோ்ச்சி பெற்றவர்களில் 99.45 சதவீத மாணவிகளும், 98.64 சதவீத மாணவா்களும் அடங்குவர்’ என்றாா்.

மாணவா் தரவரிசைப் பட்டியல் ரத்து

மதிப்பெண் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறையை ஐசிஎஸ்இ ஏற்கனவே கைவிட்டுவிட்டது. முன்னதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இந்த நடைமுறையை கைவிட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐசிஎஸ்இ-யும் தரவரிசைப் பட்டியல் வெளியீடை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

மே 4ஆம் தேதி நீட் தேர்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான 2025ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.மே 4ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வான ந... மேலும் பார்க்க

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு!

சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நடைபெறும் நகரம் எது என்பது குறித்த அறிவிப்பு என்டிஏ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நீட் நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு மே 1ஆம் தேதி வெளிய... மேலும் பார்க்க

கடந்த ஆண்டுகளைவிட முன்கூட்டியே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்வட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற... மேலும் பார்க்க

பொறியியல் நுழைவுத் தோ்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் இணைந்து நடத்தும் பொறியியல் பாடப்பிரிவுக்கான அகில இந்திய நுழைவுத்தோ்வு (ஜெஇஇ) பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க