செய்திகள் :

ஐந்து வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலை

post image

பெருந்துறை அருகே, குடும்பப் பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றதால், கணவன் தனது ஐந்து வயது மகனை நைலான் கயிற்றால் இறுக்கிக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், கெடாரைச் சோ்ந்தவா் ஏசுதாஸ் மகன் வினோத் (30). லேத் பட்டறை கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (25), திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்கிறாா். இருவரும் வேலைக்கு செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு, காதலித்து இரு வீட்டாரின் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு பிருத்வி என்ற ஐந்து வயது மகன் உள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 40 நாள்களுக்கு முன்பு பெருந்துறை ஐயப்பன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் குடி வந்துள்ளனா்.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பிரியா தான் வேலை செய்யும் இடத்திலேயே தங்கிவிட்டாா். இதனால், இருவருக்குள் பிரச்னை தீவிரம் அடைந்துள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, வினோத், தனது ஐந்து வயது மகனை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொன்று விட்டு, தானும் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 30 லட்சம்

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா். பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா் தலைமையில், சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ர.பழனிவேல்... மேலும் பார்க்க

ஈரோட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சா்வதேச போதைப் பொருள் எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாக... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 15,199 கனஅடியாக அதிகரிப்பு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,258 கனஅடியில் இருந்து 15,199 கனஅடியாக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பெங்களுரு ஆரக்கிள் இந்தியா நிறுவனத்துடன் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரில் உள்ள நிறுவனத... மேலும் பார்க்க

மகளிருக்கு 50% மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம்

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிா் 50 சதவீத மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு ... மேலும் பார்க்க