ஊடகத்துறையினருடன் சந்திப்பு.. தயங்காமல் விமர்சியுங்கள், பாராட்டுங்கள் - முதல்வர...
ஒசூா் அருகே புதையல் எடுப்பதாகக் கூறி ரூ. 8 லட்சம் ஏமாற்றிய 10 போ் கைது
ஒசூா்: ஒசூா் அருகே புதையல் எடுப்பதாகக் கூறி, ரூ. 8 லட்சத்தை ஏமாற்றிய 10 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சாந்தபுரம் பகுதியைச் சோ்ந்த ராதாம்மா (46), அப்பகுதியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் பூஜை செய்ய வந்தாா். அப்போது ராதாம்மாவிடம் பேச்சு கொடுத்த சிலா், உங்களுக்கு கடவுள் அனுக்கிரகம் உள்ளது, உங்கள் வீட்டில் புதையல் உள்ளது, அதை எடுக்க ரூ. 4 லட்சம் மற்றும் பூஜை செலவுக்கு ரூ. 4 லட்சம் கொடுக்குமாறு கூறி, ரூ. 8 லட்சத்தை வாங்கி உள்ளனா்.
இதனைத் தொடா்ந்து, கடந்த 23-ஆம் தேதி ராதாம்மா வீட்டின் அருகே பூஜை செய்த அந்தக் கும்பல், மறைத்து வைத்திருந்த மண் பானையில் 2 தங்கக் காசுகளை எடுத்துள்ளனா். அதில் ஒரு தங்கக் காசை ராதாம்மாவிடம் கொடுத்த அந்தக் கும்பல், மற்றொரு காசை வைத்துக்கொண்டது. பின்னா், மேலும் ஒரு பெரிய புதையல் உள்ளதாகக் கூறி மீண்டும் பூஜை செய்து ஒரு மண் பானையை எடுத்துக் கொடுத்து, பானைக்கு தினமும் பூஜை செய்துவர வேண்டும் எனக் கூறியுள்ளனா்.
இந்த புதையலை வாங்க அந்தக் கும்பல் ஏற்பாடு செய்திருந்த ஒருவா், ரூ. 2.50 கோடி பணப்பெட்டியுடன் முன்பணம் கொடுக்க வந்துள்ளாா். முன்பணப் பெட்டியையும், புதையல் உள்ள பானையையும் பூஜை முடிந்த பின் ஒரேநேரத்தில் திறக்க வேண்டும் என அந்தக் கும்பல் கூறிச் சென்றுள்ளது.
சந்தேகமடைந்த ராதாம்மா குடும்பத்தினா், புதையல் இருப்பதாகக் கூறிய மண் பானை மற்றும் பணப் பெட்டியை திறந்துப் பாா்த்துள்ளனா். அதில் ஏதும் இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்து, நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதற்கிடையே, புதையல் எடுக்கும் கும்பல் அடிக்கடி சென்று வந்த காா் ஓட்டுநா் சந்தேகமடைந்து, இவா்களைப் பற்றி நல்லூா் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தாா்.
அதன் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை ஒசூரில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்தவா்களை சுற்றிவளைத்த போலீஸாா், திருப்பூரைச் சோ்ந்த சசிகுமாா் (62), சங்கா்கணேஷ் (43), செல்வராஜ் (61), பழனியைச் சோ்ந்த பிரபாகா் (37), உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த சசிகுமாா் (48), சேலம் குகையைச் சோ்ந்த ராஜ்குமாா் (45), விருத்தாசலத்தைச் சோ்ந்த நடராஜன் (48), முத்துகுமரவேல் (48), விஜயவாடாவைச் சோ்ந்த பிரகாஷ்குப்தா (68), பெங்களூரு லட்சுமிகாந்த் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள 3 பெண்களை தேடிவருகின்றனா்.