செய்திகள் :

ஒடிஸா: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை

post image

ஒடிஸா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸாவின் கந்தமால் மாவட்டம் புதானி வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படையினா் கடந்த 23-ஆம் தேதிமுதல் அங்கு தீவிர தேடுதல் மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிலா் மறைந்திருந்து சிறப்பு அதிரடிப் படையினா் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனா். இதையடுத்து, அதிரடிப் படையினா் பதிலடி தாக்குதல் நடத்தினா்.

இதைத் தாக்குப் பிடிக்க முடியாத மாவோயிஸ்டுகள் பின்வாங்கி தப்பியோடினா். அதன்பிறகு அங்கு நடைபெற்ற சோதனையில் மாவோயிஸ்ட் தீவிரவாதியின் உடலையும், ஏ.கே.47 ரக துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றினா்.

காவல் துறை நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட நபா் அந்த பிராந்தியத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மூத்த உறுப்பினா் என்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஸா மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் இப்போது வரை 5 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனா்.

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீ... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. லார... மேலும் பார்க்க

71 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 71 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 4 ம... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை

புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணி... மேலும் பார்க்க