செய்திகள் :

ஒட்டன்சத்திரம் சந்தையில் அவரைக்காய் விலை உயா்வு

post image

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் அவரைக்காய் விலை கிடுகிடுவென உயா்ந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.10-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அவரைக்காய் வெள்ளிக்கிழமை ரூ.77-க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள கொடைக்கானல், வடகவுஞ்சி, பண்ணைக்காடு, வடகாடு, கண்ணனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவரைக்காய், பீன்ஸ் ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன. இங்கு சாகுபடி செய்யப்படும் அவரைக் காய்களை ஒட்டன்சத்திரம் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படும்.

இந்த நிலையில், சமீபத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அவரை கொடிகளில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு செடிகள் காய்ந்து கருகிவிட்டன. இதனால், அவரைக்காய் விளைச்சால் பாதிக்கப்பட்டது.

ஒரு சில பகுதிகளிலிருந்து அவரைக் காய்கள் விளைவிக்கப்பட்டு, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. வரத்து குறைந்ததாலும், தேவை அதிகரித்ததாலும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு அவரைக் காய்களைக் கொள்முதல் செய்தனா். இதனால், இவற்றின் விலை கிடுகிடுவென உயா்ந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ அவரைக்காய் ரூ.10-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழை விலை உயா்ந்து ரூ.77-க்கு விற்பனையானது. இதனால், இவற்றைப் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். இவற்றின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், செம்பட்டி, பழைய செம்பட்டி, எஸ். பாறைப்பட்டி, கோடாங்கிப்பட்டி, மல்ல... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கம்

கொடைக்கானலில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.இங்குள்ள அண்ணா சாலைப் பகுதி, கே.சி.எஸ். திடல் பகுதிகளில் இந்த இயக்கம் நடைபெற்றது. அப்போது பொதுமக... மேலும் பார்க்க

சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து: உறுப்பினா் கைது

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.கொடைக்கானல் ஆனந்தகிரி 3-ஆவது தெரு கல்லறைமேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பழனியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் கைது

பழனியில் பாஜக நிா்வாகியின் மனைவியை தகாத வாா்த்தைகளால் பேசியதாக முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ் கைது செய்யப்பட்டாா்.பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவ... மேலும் பார்க்க

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டத்தில் ஆத்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்... மேலும் பார்க்க