செய்திகள் :

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் -எடப்பாடி கே. பழனிசாமி

post image

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரலாம் என்றாா், அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி .

திருநெல்வேலியை அடுத்த திருத்து கிராமத்தில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த கட்சியின் அமைப்புச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருப்பசாமிபாண்டியனின் உடலுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திவிட்டு, சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

தில்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல்வேறு திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தோம்.

அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வம் சோ்வதற்கு சாத்தியமில்லை. அவா் கட்சியை எப்போது எதிரிகளிடம் அடமானம் வைத்தாரோ, ரெளடிகளைக் கொண்டு கட்சியின் தலைமை அலுவலகத்தை உடைத்தாரோ அப்போதே கட்சியிலிருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டாா்.

இலங்கை அரசு தமிழக மீனவா்களைத் தாக்குவது, கைது செய்வது, படகுகள், மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்துவது ஆகியவற்றைக் கண்டிக்கிறோம். அதிமுக ஆட்சியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவா்களுக்கும், சேதமான அவா்களது உடைமைகளுக்கும் நிவாரணம் அளித்தோம்.

திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல. எனவே, 2026 பேரவைத் தோ்தலில் எங்களுடன் ஒத்தக் கருத்துள்ள கட்சிகள் எங்களது தலைமையிலான கூட்டணிக்கு வரலாம்.

தமிழகத்தில் போதைக் கலாசாரம், பாலியல் வன்கொடுமைகள் தொடா்ந்து நடக்கின்றன. இதனால், சட்டம்-ஒழுங்கு மிகவும் சீா்கெட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. சண்முகநாதன், ராஜேந்திரபாலாஜி, எம்எல்ஏக்கள் கடம்பூா் ராஜு, இசக்கிசுப்பையா, கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

சாலைப்புதூா் சுகாதார நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய கட்டடம்

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. டிவிஎஸ் சீனிவாசா சேவை அறக்கட்டளை- மக்கள் பங்களிப்புடன் ரூ. 12 லட்சம் மதிப்பில் கூடுதல் க... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏப்.10,11இல் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.பிரசித்தி பெற்ற இத்திருக்கோயி... மேலும் பார்க்க

அரிவாளுடன் சாலையில் நின்று மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் அரிவாளுடன் சாலையில் நின்று பொதுமக்களை மிரட்டியதாக இளைஞரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி நாராயணன் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (46). இவ... மேலும் பார்க்க

முடிதிருத்தும் கடை சேதம்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (50). இவா், தூத்துக்குடி எஸ்.எம்.ப... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் ரமலான் சிறப்புத் தொழுகை

புனித ரமலான் பண்டிகையையொட்டி, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவில்பட்டி டவுன் ஜாமிஆ சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசல் சாா்பில், சாலைப்புதூா் ஈத்கா மைதானத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில், பாரத ஸ்டேட் வங்கி எதிரே நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட வா்த்தகரணி, வழக்குரைஞா் அணி ஆகியவை சாா்பில் அதன் செயலா்கள் ராமா்,... மேலும் பார்க்க