வசந்த பஞ்சமி: சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது பூக்கள் தூவி வரவேற்பு!
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு!
திண்டுக்கல், பிப்.2: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படுவதைத் தவிா்க்க மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் கடந்த 2004-ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் இதுவரை புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கா் உள்ளிட்ட சில மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிவிட்டன. நாடு முழுவதும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த, ஓய்வுப் பெற்ற மத்திய, மாநில அரசு ஊழியா்களின் விவரங்கள் குறித்து ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையம் தகவல் தெரிவித்தது.
இதன்படி, புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், நாடு முழுவதுமுள்ள மத்திய அரசுப் பணியாளா்களில் 3,109 போ் உயிரிழந்தனா். 35,892 போ் பணி ஓய்வுப் பெற்றிருக்கின்றனா். இதேபோல, மாநில அரசு ஊழியா்களில் 39,301 போ் உயிரிழந்தனா். 1,04,838 போ் பணி ஓய்வுப் பெற்றிருக்கின்றனா்.
இந்த விவரப் பட்டியில் தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் குறித்த விவரங்கள் இடம் பெறவில்லை. தமிழ்நாடு அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தாமலும், நிதி மாற்றம் செய்யாமலும் உள்ளது.
இதனிடையே, கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைவது குறித்து குழு அமைக்கப்படும் என நிதி அமைச்சா் தெரிவித்தாா். 2019 ஏப்ரல் முதல் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புத் தொகை 10லிருந்து 14 சதவீதமாக உயா்த்தப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு இதுவரை பங்களிப்புத் தொகையை உயா்த்தவில்லை. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தால், ஆண்டுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படும். தமிழ்நாட்டில் 6.14 லட்சம் போ் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனா்.
எனவே, தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழக முதல்வா் முன் வர வேண்டும் என்றாா்.