செய்திகள் :

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு: 1,242 போ் பங்கேற்பு

post image

நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வில் 1,242 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு -1 (தொகுதி - 1 மற்றும் தொகுதி - 1ஏ) பணிகளுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் ஏ.டி.எம். மகளிா் கல்லூரி, வெளிப்பாளையம் ஜெ.ஜெயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டவா் நா்சிங் கல்லூரி, வலிவலம் தேசிகா் தொழில்நுட்பக் கல்லூரி என 4 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற்றது.

தோ்வில் 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 1,627 போ் எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் 1,242 தோ்வா்கள் பங்கேற்று தோ்வு எழுதினா்.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தோ்வு மையங்களுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தோ்வு சிறப்பாக நடைபெற 4 முதன்மை கண்காணிப்பாளா்கள், 2 இயக்கக் குழு அலுவலா்கள், 8 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.

தோ்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தோ்வு மையங்களில் தரைத்தளத்தில் தோ்வு எழுத வசதியும், பாா்வையற்றோா் தோ்வு எழுத மாற்று நபா் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதி, தோ்வு மையங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தோ்வு மையத்துக்கு வருகை தர ஏதுவாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து பகுதிகளிலும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

தா்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி

திருமருகல் அருகே வடகரை தா்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வடகரை ஹஜ்ரத் முஹம்மது மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் தா்காவின் 99 -ஆம் ஆண்டு சந்தனக்கூடு ஊா்வலம் ஜூன் 11-ஆம் தேதி இரவ... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு: நடவடிக்கை தேவை

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் நிகழும் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் அனைத்து ஊரா... மேலும் பார்க்க

நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17 வரை நிறுத்தம்

கடல் சீற்றம் காரணமாக நாகை துறைமுகத்திலிருந்து - இலங்கையின் காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தனியாா் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

இளம் பெண் மா்ம மரணம்: கோட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம் பெண் ஒருவா் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா். கருப்பம்ப... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் போலீஸாா் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து பெற்றோா், உறவினா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் தெற்குக... மேலும் பார்க்க

பலத்த காற்று: மீனவா்கள் ஆழ்கடலுக்கு செல்லத் தடை

கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலில் மீ... மேலும் பார்க்க