ஒரே கிராமத்தில் 3 வீடுகளில் திருட்டு
திருவண்ணாமலை அருகே ஊசம்பாடி கிராமத்தில் 3 வீடுகளில் தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலை அருகே உள்ள ஊசம்பாடி கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடாசலம் சனிக்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா். அவா் காலையில் எழுந்து பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை, ரூ.4,500 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதே பகுதியைச் சோ்ந்த திருமலை வீட்டில் ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு பவுன் தங்க நகையும், முன்னாள் ராணுவ வீரா் தணிகைமலை வீட்டில் ரூ.4 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களையும் மா்ம நபா்கள் திருடி சென்றனா். இதே பகுதியில் மேலும் இரண்டு வீடுகளில் திருட்டு முயற்சி நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று திருட்டு நடைபெற்ற வீடுகளை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.