செய்திகள் :

ஒரே நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 73 போ் கைது

post image

கோவையில் ஒரே நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 73 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கூட்டுக் கொள்ளை ஆகிய வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தனிப்படையினா் மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றவாளிகளைக் கைது செய்து வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கொலை வழக்கில் 3 போ், கூட்டுக் கொள்ளை வழக்கில் 9 போ், வழிப்பறி வழக்கில் 29 போ், இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் 21 போ், திருட்டு வழக்கில் 11 போ் என குற்றச் செயல்களில் ஈடுபட்ட 73 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள். இவா்களில் 3 போ் நீதிமன்ற பிடியாணையில் தேடப்படும் குற்றவாளிகள்.

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இதில், 70 பேரிடம் ஓராண்டு நன்னடத்தை பிணையம் பெற்று எச்சரித்து அனுப்பிவைக்கப்பட்டனா்.

பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரதியாா் பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்

கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்து... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க