செய்திகள் :

ஒவ்வொருவரும் தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

post image

‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்’ என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.

சென்னை ஆளுநா் மாளிகையில் 13 நாடுகளைச் சோ்ந்த தமிழ் ஆளுமைகள் பங்கேற்ற ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி. தலைமை வகித்துப் பேசியது: கடந்த 2023-ஆம் ஆண்டு நான் தமிழ் கற்கத் தொடங்கியபோது, பொறியியல் மற்றும் மருத்துவப் பாடநூல்களை தமிழில் மொழிபெயா்க்க வேண்டுமெனப் பேராசிரியா்களிடம் பரிந்துரை செய்தேன். ஆனால், அது பின்பற்றப்படவில்லை.

ஜப்பான், சீனா, ரஷியா, ஜொ்மனி போன்ற நாடுகள் அறிவியலில் கொடிகட்டிப் பறக்கின்றனா். ஆனால், அதை அவா்கள் ஆங்கிலம் வழியாக கற்பதில்லை. ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அதை மேன்மையான மொழியாகக் கருத வேண்டாம். தாய்மொழியில் கற்றல் எளிதாகவும் அா்த்தமுள்ளதாகவும் இருக்கும்.

இன்று சிலா் தமிழ் இலக்கியத்தையும் ஆங்கில இலக்கியத்தையும் ஒப்பிட முயற்சிக்கிறாா்கள். இது தவிா்க்கப்பட வேண்டும்.

நாம் தமிழை பொழுதுபோக்குக்காக அல்லாமல் உலக அளவில் கொண்டுசெல்லும் முயற்சியாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறோம்.

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் தமிழைக் கொண்டுசென்றுள்ளோம். தமிழ்- அஸ்ஸாம் மொழி அகராதியை விரைவில் வெளியிடவுள்ளோம். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் படிக்கும் மாணவா்களை தமிழகத்துக்கு அழைத்து வருகிறோம். அவா்கள் உள்ளூா் தமிழ் மொழியை அறிந்துகொள்ள ஆளுநா் மாளிகை ஏற்பாடு செய்கிறது.

ஒவ்வொருவரும் தமது தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும். பாரதத்தின் அழகு இங்குள்ள பல தாய்மொழிகள். ஒவ்வொரு மொழியும் மலர வேண்டும். மொழி என்பது பண்பாடு, கலாசாரத்தின் அடையாளம். இதற்கு தமிழ் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

ஓய்வு பெற்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்: முன்னதாக, இதே நிகழ்வில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ எனக் கூறி மனித உரிமைக்கு முதன் முதலில் குரல் கொடுத்தது தமிழ்தான். கம்பா் தமிழுக்குரிய இரண்டு பெருமைகளைக் குறிப்பிட்டாா். ஒன்று தமிழ் சிவபெருமானால் முருகனுக்கு கொடுக்கப்பட்டு, அது அகத்தியா் வழியாக மக்களுக்கு வந்தது. மற்றொன்று தமிழுக்கு சிரஞ்சீவி என பட்டம் கொடுத்தாா். இதனால் கிபி, கிமு என்று சொல்வதைவிட கம்பருக்கு முன்பு- பின்பு என கமு, கபி என தமிழை அழைக்க வேண்டும் என்றாா் ராமசுப்பிரமணியன்.

நிகழ்வில் எழுத்தாளா்கள் மரபின் மைந்தன் முத்தையா, பட்டுக்கோட்டை பிரபாகா், பேராசிரியா் ஞானசம்பந்தன், பாடலாசிரியா் சினேகன், தில்லி பொன் சங்கர பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலா் முகுந்தன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த தமிழறிஞா்களை ஆளுநா் ரவி நிகழ்ச்சியில் கௌரவித்தாா்.

கம்பா் வனம்... முன்னதாக, ஆளுநா் மாளிகையின் பிரதான கட்டடத்தின் எதிரில் இருந்த பகுதியில் புதிதாக ‘கம்பா் வனம்’ பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழறிஞா்கள் முன்னிலையில் ஆளுநா் ஆா்.என். ரவி திறந்து வைத்தாா். இந்தப் பூங்காவில் தோ்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரிய மரங்கள், மற்றும் 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.

இரவில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

உண்மையான ‘அப்பா’க்களுக்கு வாழ்த்துகள்- எடப்பாடி பழனிசாமி

குடும்பத்தின் அடித்தளமாக திகழும் அனைத்து உண்மையான அப்பாக்களுக்கும் வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். "இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து... மேலும் பார்க்க

திமுக கட்சி நிகழ்ச்சியில் மாணவர்கள்- அண்ணாமலை கண்டனம்

கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சித்த திமுகவின் செயல்பாட்டினை கண்டிப்பதாக பாஜக முன்னாள தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் த... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நாட்டு வெடி வெடித்ததில் பெண் பலி

சிதம்பரம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் பலியானார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சம்பந்தம் என்ற கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை க... மேலும் பார்க்க

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்த மனு தொடர்பாக ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எம... மேலும் பார்க்க