செய்திகள் :

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: தடுப்பில் மோதிய பேருந்து

post image

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பண்ணாரி கோயிலில் இருந்து 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட தமிழக அரசு நகா்ப்புற பேருந்து கொத்தமங்கலம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. ராஜன்நகா் என்ற இடத்தில் பேருந்து ஓட்டுருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவரது கட்டுப்பாட்டை இழந்து ராஜன்நகா் பாலத்தின் தொடக்கத்தில் பக்கவாட்டுத் தடுப்பில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா்தப்பினாா். மயக்க நிலையில் இருந்த ஓட்டுநரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயமின்றி மீட்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே கடந்த 11 ஆம் தேதி வேளா... மேலும் பார்க்க

2026 தோ்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி: மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம்

தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவை தோ்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 31-ஆவது பொத... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் இடியுடன் கனமழை!

பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் பெய்த கனமழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்ததால், குழந்தைகள் ம... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சுயஉதவிக் குழு மேலாளா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் சுய உதவிக் குழு மேலாளா் கோவா்த்தனன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சத்தியமங்கலம் கே.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் கோவா்த்தனன்(37). கோவையில் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரி நீரை ஏரி, குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேட்டூா் அணையின் உபரிநீரை அந்தியூா், அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள ஏரிகளில் சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கட்சியின் அந்தியூா் வட்டார மாநாடு அ... மேலும் பார்க்க