செய்திகள் :

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உத்சவ கொடியேற்றம்

post image

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் இன்று (ஜூன் 23-ம் தேதி) திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவம்10 நாட்கள் நடைபெறுகிறது.

நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் யு.எஸ்.சிவசைலாஸ் தீட்சிதர் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் பசுக் கொடியை ஏற்றினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது.

உத்சவ விபரம் வருமாறு: ஜூன் 24-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 25-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 26-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 27-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 28-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 29-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 30-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

ஜூலை 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை.2-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூலை.3-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜூலை 4-ம் தேதி வெள்ளிக்ழமை தெப்போற்சவத்துடன் உற்சவம் முடிவடைகிறது.

உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச் செயலாளர் சிஎஸ்எஸ் வெங்கடேச தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னைக்கு?

ஆ.ராசாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.53 கோடி சொத்துகள் சேர்த்ததாக 2015-ல் ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவ... மேலும் பார்க்க

மாம்பழங்களுக்கு ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும்- சீமான்

மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையை தமிழ்நாடு அரசு நிர்ணயிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நடப்பாண்டில் ... மேலும் பார்க்க

ஜூன் 25-ல் ரயில் மூலம் காட்பாடி செல்லும் முதல்வர்!

கள ஆய்வு மேற்கொள்ள நாளை மறுநாள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக முதல்வர் ஸ்டாலின் காட்பாடி செல்கிறார். ஜூன் 25, 26 ஆம் தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செய்ய... மேலும் பார்க்க

தட்கல் டிக்கெட் - ஆதார் எண் இணைப்புப் பணி தொடக்கம்!

இந்திய ரயில்வேயில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஐஆர்சிடிசி தொடங்கியிருக்கிறது.அதன்படி, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயனர்கள், தங்களது ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி இணையதளத்... மேலும் பார்க்க

பிரகாசமாக எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்; வாழ்த்தியவர்களுக்கு நன்றி: விஜய்!

சென்னை: திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்த நிலையில், வாழ்த்தியவர்களுக்கு விஜய் நன... மேலும் பார்க்க

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னைக்கு?

சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று காலை முதலே சில்லென்ற வானிலை காணப்படுகிறது.சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலையில் லேசான தூறல் போட்டு பூமி... மேலும் பார்க்க