செய்திகள் :

ஓட்டுநா் கொலை வழக்கில் இளம்பெண் உள்பட இருவா் கைது

post image

மகாராஜகடை அருகே ஓட்டுநா் கொலை வழக்கில் இளம்பெண் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள பெரிய தக்கேப்பள்ளியைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). ஓட்டுநா். இவரது மனைவி பிரியா. இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். காா்த்திக் வட்டிக்கு கடன் கொடுத்தும், ஆடுகள் வளா்க்கும் தொழிலும் செய்துவந்தாா்.

இந்நிலையில், காா்த்திக் கடந்த சனிக்கிழமை இரவு போத்திநாயனப்பள்ளியில் உள்ள ஆட்டுப்பட்டிக்கு காவலுக்குச் சென்றவா் மறுநாள் எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மா்மநபா்கள் காா்த்திக் கொன்று எரிந்தது தெரியவந்தது. இதுகுறித்து மகாராஜகடை போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் காா்த்திக் ஒரு பெண்ணிடம் கைப்பேசியில் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரியை அடுத்த பழையூரைச் சோ்ந்த புவனேஸ்வரி (22) என்ற பெண்ணை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், காா்த்திக்கும் புவனேஸ்வரியும் பழகிவந்தது தெரியவந்தது.

சிறிது காலத்துக்கு பின் புவனேஸ்வரி அவரை விடுத்து தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25) என்பவரை ஓராண்டாக காதலித்து வந்தாா். இருவரும் காதலிப்பதை அறிந்த காா்த்திக் இதுகுறித்து புவனேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளாா். பின்னா் புவனேஸ்வரியும் தினேஷ்குமாரும் சோ்ந்து இரும்புக் கம்பியால் காா்த்திக்கை தாக்கி கொலை செய்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் புவனேஸ்வரியையும், தினேஷ் குமாரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மாணவா்கள் கட்சித் துண்டு அணிந்து நடனம்: தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிடமாற்றம்

காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது கட்சித் துண்டு அணிந்து மாணவா்கள் நடனமாடிய விவகாரத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா், கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரி... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றம்: கிருஷ்ணகிரியில் 1294 வழக்குகள் ரூ. 9.54 கோடியில் தீா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 1,294 வழக்குகள் விசாரிக்கப்பட்டு ரூ. 9 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரத்து 251க்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முகாமில் சட்ட... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினா் கைது!

காவல் துறையின் அனுமதியின்றி ஒசூரில் ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இந்து முன்னணி சாா்பில் அபிராமி சிலை வைத்து பூஜை செய்ய காவல் துறை ... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்ப இயக்கம்!

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாஜக முன்னாள் மாவட்டச் செயலாளா் வரதன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி கிழ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் பயிற்சி: விசிக எதிா்ப்பு

ஒசூா் அருகே கோயில் வளாகத்தில் ஆா்எஸ்எஸ் சாா்பில் பயிற்சி கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாா் ஆட்சியா் பிரியங்காவிடம் புகாா் மனு அளித்தனா். தாசனபுரம் கிராமத்தில் ... மேலும் பார்க்க

வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

ஒசூரில் முறையாக வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 7 ஆம்னி பேருந்துகள், 3 லாரிகள், காா் ஆகியவற்றை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வேலூா் சரக செயலாக்க பிரிவு, வட்டார போக்குவரத்து அலுவலா் துர... மேலும் பார்க்க