செய்திகள் :

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியரிடம் 11 பவுன் சங்கிலி திருட்டு

post image

செய்யாறு: செய்யாறில் ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியரிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை நூதன முறையில் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி ஜெயா (67). ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா். இவா் திங்கள்கிழமை காலை 11 மணியவில் செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் அவரது கணக்கில் பணத்தை செலுத்தினாா்.

பின்னா், அங்கிருந்து திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாவைக் காண்பதற்காக நடந்து சென்றாா். எம்எல்ஏ அலுவலகம் அருகே சென்ற போது, எதிரே வந்த 3 பேரில் ஒருவா் தன்னை போலீஸ் எனக் கூறி, ஜெயா அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வளையல் ஆகியவை கழட்டித் தருமாறும், அதைப் பாதுகாப்பாக காகிதத்தில் மடித்து தருவதாக கூறி 11 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கி விட்டு, வெற்று காகிதத்தை மடித்து கொடுத்து விட்டு சென்று விட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் நிலைய ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கல்லூரி வளாக நோ்காணல்: 414 பேருக்கு வேலைவாய்ப்பு

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 414 மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனா். இதில், சென்னையைச் சோ்ந்த 10 தனியாா் நிறுவனங்களின் மனிதவள மேலாளா்கள... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பரதக் கலைஞா்களின் நாட்டியாஞ்சலி

ஆரணி: திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதக் கலைஞா்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி திங்கள்கிழமை நடைபெற்றது. உலக நன்மைக்காக சாய் சுரக்ஷா கல்சுரல் அகாதெமி, பிரகத... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வேலூா் சாயிநாதபுரம் தந்தை பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி தேவராஜ் (65).... மேலும் பார்க்க

ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் தவிப்பு

ஆரணி: ஆரணியை அடுத்த வடுகசாத்து, சோ்ப்பாக்கம், குன்னத்தூா், இரும்பேடு ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், 100-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களுக்கு தண்ணீா் செல்ல வழி இல்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செய்யாறு வட்டம், மடிப்பாக்கம் கிராமம் இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் யுவராஜ் (23). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை... மேலும் பார்க்க

60 மதுப்புட்டிகளுடன் ஒருவா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே மதுப்புட்டிகளுடன் நின்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது... மேலும் பார்க்க