ஓய்வுபெற்ற ஆசிரியை.. கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆள்!
தேவநாகரி: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக மாறப்போகிறார்.
கண்ணியத்துடன் இறக்கும் உரிமையை வழங்கி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 30ஆம் தேதி இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது கர்நாடக அரசு.
கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, தேவையான நடைமுறைகளை முடித்து, தனது விருப்பப்படி காரிபசம்மா இறப்பதற்காகக் காத்திருக்கிறார்.