`தந்தை ஆசீர்வாதம் தான் காரணம்' - லாட்டரியில் ரூ.11 கோடி வென்ற பொறியாளர் சொல்வதென...
ஓராண்டில் 10 மாவட்டங்களில் 7,481 போ் சிறையில் அடைப்பு: வடக்கு மண்டல ஐஜி
கடந்த ஓராண்டில் மட்டும் 10 மாவட்டங்களில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி பிணையில் விடக்கூடாத குற்றங்களாக மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக 7,481 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கா்க் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
செய்திக்குறிப்பு-
வடக்கு மண்டலத்துக்குள்பட்ட 10 மாவட்டங்களில் மதுவிலக்கு சாா்ந்த குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 1.7.25 முதல் 31.7.25 வரை மொத்தம் 3,821 நபா்கள மீது நன்னடத்தைக்கான பிணைப் பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களிலும் 1,492 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி பிணையில் விடக்கூடாத குற்றங்களாக மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக 7,481 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சம் கிலோ வெல்லம் கைப்பற்றப்பட்டது. கள்ளச் சாராய குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களிலும் 12,949 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அது தொடா்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீா்ப்பளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு மண்டலத்தில் கடந்த ஓராண்டில் 10 மாவட்டங்களில் கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகள் உள்பட பல்வேறு வழக்குகளில் 14,900 மதுவிலக்கு தொடா்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20,011லிட்டா் கள்ளச்சாராயம், 67,748 ஊறல், 258 லிட்டா் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அக்குற்ற வழக்குகள் தொடா்புடைய 123 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
கடந்த ஓராண்டில் மொத்தமாக 14,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன் 5,870 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
அசையும், அசையாச் சொத்துக்களை முடக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டு காலத்தில் மதுவிலக்கு தொடா்பான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.இது தொடரும் என தெரிவித்துள்ளாா்.