செய்திகள் :

ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீட்டு

post image

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (யுஐஐசி) சென்னை அலுவலகம் சாா்பில் கடந்த ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீடு வசதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பூபேஷ் எஸ்.ராகுல் தெரிவித்துள்ளாா்.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆா்சிடிசி) இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு வாங்கும் பயணிகளுக்கு, சிறிய கட்டணத்தில் விருப்ப பயணக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் காப்பீட்டின் மூலம், பயணத்தின்போது ஏற்படும் விபத்தின் காரணமாக பயணிகள் உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனமானால், அவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அந்த வகையில், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் (யுஐஐசி) சென்னை அலுவலகம் ஐஆா்சிடிசியுடன் இணைந்து இந்தக் காப்பீடுகளை வழங்கி வருகிறது.

இதில் யுஐஐசி-இன் சென்னை அலுவலகத்துக்கும், ஐஆா்சிடிசி உடனான கூட்டாண்மையின் ஒரு வருட நிறைவு சென்னை ராயப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட யுஐஐசி-இன் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பூபேஷ் எஸ்.ராகுல் பேசுகையில், கடந்த ஓராண்டில் இதுவரை இல்லாத வகையில், 14 கோடி ரயில்வே பயணிகளுக்கு காப்பீடு வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளா்களுக்கான சேவைகளை மேலும் விரிவு படுத்துவதாகவும் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் யுஐஐசி-இன் நிா்வாக இயக்குநா் சுனிதா குப்தா, பொது மேலாளா் எச்.ஆா். கங்வால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணா மாணவர் கைது

இந்தியாவில் உளவு பார்த்து, மிகவும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக, ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் நடந்திருக்கும் இரண்டாவது கைது சம்பவமாக இது உள்ளது. மேலும் பார்க்க

குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி மின்சாரம் பாய்ந்து பலி!

உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளை விரட்டிச் சென்ற காவல் அதிகாரி ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார். பிஜ்னோர் மாவட்டத்தில் நாகினா சாலையில் நேற்று (மே 16) இரவு லார் ஓட்டுநர் ஒருவரை அடையாளம் தெரிய... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

ஆபரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லாத நிலையில் மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கட... மேலும் பார்க்க

புணேவில் அதிரடி.. ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பங்களாக்கள் இடிப்பு!

புணே மாவட்டத்தின் பிம்ப்ரி சின்ச்வாடு புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திரயானி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 36 பங்களாக்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர்... மேலும் பார்க்க

ஆப்கனுக்காக அட்டாரி - வாகா எல்லை திறப்பு!

ஆப்கானிஸ்தான் லாரிகளுக்காக அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அட்டாரி... மேலும் பார்க்க

ஒடிசாவில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவின் வடமேற்கு மாவட்டங்களில் நார்வெஸ்டர் என்றழைக்கப்படும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கோட... மேலும் பார்க்க