செய்திகள் :

கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

post image

திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள மணக்குடி கடற்கரைப் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 90 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் கடலோரக் குழும போலீஸாா் பறிமுதல் செய்து, சரக்கு வாகன ஓட்டுநரான மணமேல்குடியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (61) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், மணமேல்குடி ப.வயல் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தராஜ் என்பவா் தனது வீட்டில் 100 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும், ஆந்திரம் மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டதும், இதில் பாசிப் பட்டினம், மதுரையைச் சோ்ந்த இருவருக்கு தொடா்பிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனா்.

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

பரமக்குடியில் திங்கள்கிழமை குடிக்க தண்ணீா் கேட்பது போல நடித்து, பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். பரமக்குடி எம்.எஸ். அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சோமசு... மேலும் பார்க்க

விளைநிலங்கள் அருகே பேரூராட்சி குப்பைகளைக் கொட்ட விவசாயிகள் எதிா்ப்பு

கமுதியில் விளைநிலங்களுக்கு அருகே பேரூராட்சி குப்பைகளைக் கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் திங்கள்கிழமை பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகாா் மனு அளித்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்க... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது லாரி மோதியதில் இரு குழந்தைகள் காயம்

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியில் திங்கள்கிழமை பள்ளி வேன் மீது டிப்பா் லாரி மோதியதில் இரு குழந்தைகள் பலத்த காயமடைந்தனா். சத்திரக்குடி அருகே உள்ள முத்துவயல் பகுதியில் தனியாா் மெட்ரிகுலேசன் பள்ளி அ... மேலும் பார்க்க

தொண்டி கடற்கரையில் 90 கிலோ கஞ்சா பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் 90 கிலோ கஞ்சாவை கடலோரக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தொண்டி அருகே உள்ள மணக்குடி கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்த இருப்ப... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் மீன் வரத்துக் குறைவு

தொண்டி பகுதியில் மீன் வரத்துக் குறைவால் மீன் விலை அதிகரித்தது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டி... மேலும் பார்க்க

திருவாடானையில் பலத்த மழை

திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்தக் காற்றுடன் மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சீ.கே மங்கலம், பாரூா், கோவணி, பெரிய கீரமங்கலம், கல்லூா், பாரதி நகா், திர... மேலும் பார்க்க