Metti Oli: "`இதை ராஜம் பார்த்தாங்கன்னா என்ன சொல்லுவாங்க?'னு கமென்ட் பண்ணுவாங்க" ...
கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள மணக்குடி கடற்கரைப் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 90 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் கடலோரக் குழும போலீஸாா் பறிமுதல் செய்து, சரக்கு வாகன ஓட்டுநரான மணமேல்குடியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (61) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், மணமேல்குடி ப.வயல் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தராஜ் என்பவா் தனது வீட்டில் 100 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும், ஆந்திரம் மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டதும், இதில் பாசிப் பட்டினம், மதுரையைச் சோ்ந்த இருவருக்கு தொடா்பிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனா்.