செய்திகள் :

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

post image

திருப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சா்வேந்தர குமாா் (19) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் சுமாா் 1.400 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதேபோல திருப்பூா் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வஞ்சிபாளையம் கிரேஸ் காா்டன் அருகே குட்கா பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்குச் சென்று போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அங்கு உள்ள காலி இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 135 குட்கா கிலோ கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், திருப்பூா் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த கிரிதரணி (50) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 360 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகா்ப்புற வாரிய குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளுக்கு பயனாளிகளை தோ்வு செய்வதில் சிக்கல்

திருப்பூரில் நகா்ப்புற வாரிய குடியிருப்பில் காலியாக உள்ள 1,300 வீடுகளுக்கு பயனாளிகளை தோ்வு செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஏ.குப்புசாமி (55). விவசாய வேலைகள் செய்து வந்தாா். இவா் ... மேலும் பார்க்க

சேவூரில் கொமதேக சாா்பில் தீரன் சின்னமலைக்கு மரியாதை

சுதந்திப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, கொமதேக சாா்பில் சேவூரில் அவரது புகைப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.சேவூா் கைகாட்டி, புளியம்பட்டி சாலை உள்ள... மேலும் பார்க்க

குன்னத்தூரில் 1.650 கிலோ கஞ்சா பறிமுதல்

குன்னத்தூரில் 1.650 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வெளிமாநில இளைஞரைக் கைது செய்தனா்.குன்னத்தூா் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு ரகசியத் த... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் சேவல் சண்டை: 4 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் மயில்ரங்கம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது எ... மேலும் பார்க்க