செய்திகள் :

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

post image

முதுகுளத்தூா் அருகே 5.25 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமையிலான போலீஸாா் முதுகுளத்தூா் - ராமநாதபுரம் சாலையில் காக்கூா் புறக்காவல் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுதொடா்பாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஊ.கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த திவாகரன் (22), பசும்பொன்னைச் சோ்ந்த ராமா் பாண்டி (26), மறவாய்குளத்தை சோ்ந்த முனீஸ்வரன் (18) ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, முதுகுளத்தூா் - பரமக்குடி சாலையில் ஆற்றுப்பாலம் அருகே வாகன சோதனை செய்தபோது, கீழத்தூவலைச் சோ்ந்த நாகமுனீஸ்வரன் (24), மேலத்தூவலைச் சோ்ந்த கோவிந்தசாமி (22)ஆகிய இருவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க

எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு ரயில்வே துறையை தனியாா் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் ரயில் நிலைய பணிமனை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.ஆா்.எம்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம்: 4-ஆவது முறையாக சோதனை

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இரும்பாலான இணைப்பை (கா்டா்) மேலே தூக்கி வெள்ளிக்கிழமை 4-ஆவது முறையாக சோதனை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தொண்டி அருகே எஸ்.பி. பட்டினத்தில் விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ... மேலும் பார்க்க