செய்திகள் :

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

post image

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை, போலீஸாா் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கடையம் அருகே ரவணசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தென்காசி போதை ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மதுவிலக்கு துணைக் கண்காணிப்பாளா் பழனிகுமாா் தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ரவணசமுத்திரம்அருகே காட்டுப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து சோதனை செய்ததில் விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், பொட்டல்புதூா், துா்க்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜாா்கன்ஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து ஒருகிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தபாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். சி... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் சிறையில் அடைக்கப்பட்டாா்.மானூா் அருகே வன்னிக்கோனந்தல் வடக்குத்தெருவைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மனோஜ் (19). இவா், அடிதடி, ... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் மகன் சரண்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் அவரது மகன் சரணடைந்தாா். கூடங்குளம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வெட்டு... மேலும் பார்க்க

கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு: ஆட்சியா் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வ... மேலும் பார்க்க

பாளை.யில் மின் ஊழியா்கள் தா்னா

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திட்டத் தலைவா் பி.நாகையன் தலைமை வகித்தாா். அயூப் கான், பச்சையப்பன், பூலுடையாா் ... மேலும் பார்க்க

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

பழவூரில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பழவூா் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் சுடலையாண்டி (43). இவரின் மனைவி ஜெயலெட்சுமி (34). இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம். ... மேலும் பார்க்க