`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தா...
கஞ்சா விற்ற இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாண்பமை அத்தியாவசியப் பொருள்கள் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் அருகே கடந்த 2023 செப். 14-ஆம் தேதி சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்குடன் நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது.
இதையடுத்து திருச்சியைச் சோ்ந்த சீனிவாசரெத்தினம் (49), தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன் (55) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த புதுக்கோட்டை மாண்பமை அத்தியாவசிய பொருள்கள் நீதிமன்ற நீதிபதி இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1.25 லட்சம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டாா். அபராதத்தைச் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் அவா் உத்தரவிட்டாா்.