செய்திகள் :

கடந்த 5 ஆண்டுகளில் 120 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்: ஒடிசா முதல்வர்

post image

ஊழலில் ஈடுபட்டதற்காகக் கடந்த 5 ஆண்டுகளில் 120 அரசு அதிகாரிகள் மற்றும் 39 அதிகாரிகள் கட்டாய ஓய்வு அளித்துள்ளதாக ஒடிசா அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் துருபா சரண் சாஹூவின் கேள்விக்கு ஒடிசா முதல்வர் சரண் மாஜீ எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 120 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 2024-24-க்கு இடையில் ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கியதற்காகவும் 39 அதிகாரிகள் கட்டாய ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும், அரசு அதிகாரிகளிடமிருந்து ரூ.59.47 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்துள்ளது என்று அவர் கூறினார்.

ஆண்டுவாரியான விவரத்தை அளித்த முதல்வர், 2023ல் 31 அரசு அதிகாரிகளும், 2024-ல் 30 பேரும், 2020-ல் 27 பேரும், 2021 மற்றும் 2022ல் தலா 16 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

2021-இல் 23 அதிகாரிகளுக்கும், 2022-இல் 13 பேருக்கும், 2020, 2023 மற்றும் 2024-ல் தலா மூன்று பேருக்கும் முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் தகிக்கும் வெப்பம்: 223 மண்டலங்களுக்கு எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேசத்தில் 35 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஆறு மண்டலங்களில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வா... மேலும் பார்க்க

சிறந்த நண்பர் மோடி: டிரம்ப் பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த நண்பர் என்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியதுடன், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேச... மேலும் பார்க்க