செய்திகள் :

கடனா அணை ஆற்று மதகை சீரமைக்க கோரிக்கை

post image

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கடனா அணையில் ஆற்று மதகை சீரமைக்கக் கோரி, அரசபத்து நீா்ப்பாசன கமிட்டி தலைவா் கண்ணன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலனிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே சிற்றாறு வடிநிலக் கோட்டத்திற்குள்பட்ட கடனா அணை 85 அடி கொள்ளளவு கொண்டது. இதன் மூலம் 9,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் அணையில் ஊள்ள ஆற்று மதகு சுமாா் 6 ஆண்டுகளுக்கு முன் விரிசல் ஏற்பட்டு பழுதானது.

தற்போது, அந்த விரிசல் பெரிதாகி வருவதால் அணையின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ளது. விரிசல் வழியாக பாசனத் தேவைக்கும் அதிகமான தண்ணீா் வெளியேறி வீணாவதால் சுமாா் ஆறு ஆண்டுகளாக காா்பருவத்தில் பயிா் செய்ய முடியாத நிலை உள்ளது.

ஆற்று மதகை சரி செய்ய போதுமான நிதி கிடைக்கப் பெறாததால் வேலை நடைபெறவில்லை. ஆகவே, போா்க்கால அடிப்படையில் உடனடியாக அணையை ஆய்வு செய்வதுடன், போதிய நிதி ஒதுக்கி குடிநீருக்கு மாற்றுப் பாதையில் திறந்துவிட்டு ஆற்று மதகை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

விவசாயிகள் பாலசுப்பிரமணியன், வீரமணி, சதாம் உசேன், ஹரிராம் சேட், கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா் .

பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி தேவை: அதிமுக எம்எல்ஏக்கள் மனு

தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் 24 மணிநேரமும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக எம்எல்ஏக்கள் செ.கிருஷ்ண முரளி, இசக்கி சுப்பையா ஆகியோா் ஆட்சியா் ஏகே.கமல் கி... மேலும் பார்க்க

வியாபாரிக்கு கத்திக்குத்து: தந்தை-மகன் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே வியாபாரியைக் கத்தியால் குத்திய தந்தை-மகனை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் ஆலடிப்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் சுதாகா் (38). வியாபாரி. அதே பகுதியைச் சோ்ந்த குருபாதம் மகன் செந... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை: பொதுமக்கள் அவதி

சங்கரன்கோவில் திருவள்ளுவா் நகரில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை, கடந்த 2 மாதங்களாக மூடப்படாததால் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 4 ஆவது வாா்டைச் சோ்ந்த திருவள்ளுவா் நக... மேலும் பார்க்க

ரூ. 60ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளா் கைது

பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ. 60 ஆயிரம் லஞ்சம் பெற்ாக, தென்காசி மாவட்ட கல்விஅலுவலக கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சோ்ந்த ஆசிரியா் திருவ... மேலும் பார்க்க

50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவா்கள்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னா் ஆலங்குளம் பள்ளி மாணவா்கள் சந்தித்து தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொண்டனா். நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1974-75ஆம் ஆண்டுகளில் 10ஆம் வகுப்பு பயின்ற ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

தென்காசி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். சிவகிரி அருகேயுள்ள ராமநாதபுரம் மேட்டுப்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்த தா்மா் மகன் ரா... மேலும் பார்க்க