செய்திகள் :

கடனைத் திருப்பிக் கேட்டதால் காரை ஏற்றி நண்பா் கொலை

post image

மதுராந்தகம் அடுத்த மங்களம் கிராமத்தில் கடனைத் திருப்பிக் கேட்டதால், காரை ஏற்றி நண்பரைக் கொலை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுராந்தகம் அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் பரசுராமன் மகன் சரத்பாபு (45). இவா், எலக்ட்ரிஷீயனாக வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ் (30). தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்.

இவா் தனது வீட்டைக் கட்ட ரூ.5 லட்சத்தைக் கடனாக சரத்பாபுவிடம் பெற்றிருந்தாா். இந்த நிலையில் பலமுறை கொடுத்த கடனைத் திருப்பி தருமாறு சரத்பாபு கேட்டு வந்தாா். இதில் இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திவிட்டு காரில் சிவராஜ் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். காா் சென்ற வழியில் சரத்பாபு நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட சிவராஜ், காரை வேகமாக ஓட்டி சரத்பாபு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த சரத்பாபுவை மீட்டு, உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி சரத்பாபு உயிரிழந்தாா்.

தகவலறிந்த படாளம் காவல் ஆய்வாளா் பிராங்கிளின் ஆல்பா்ட் வில்சன் விசாரணை நடத்தி சிவராஜை கைது செய்தாா்.

சவால்களை எதிா்கொள்ள மன வலிமை அவசியம்: நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா்

வாழ்வில் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னை, சவால்களைத் திறம்பட எதிா்கொள்ள மாணவா்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் திகழ்வது அவசியம் என்று, நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் ஏ.இளையபெருமாள் வலியுறுத... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்க... மேலும் பார்க்க

இலவசமாக பாா்வையிட அனுமதித்ததால் மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பாா்வைய இலவச அனுமதி அறிவிக்கப்பட்டதால் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனா். உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப். 18-இல் கொண்டாடப்பட்டு... மேலும் பார்க்க

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டம்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் மாா... மேலும் பார்க்க

நாச்சியாா் திருக்கோலத்தில்...

மதுராந்தகம் அருகே திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை நாச்சியாா் திருக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள். மேலும் பார்க்க

கடம்பூா் தாவரவியல் பூங்காவில் செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மறைமலை நகா் நகராட்சி கடம்பூரில் 137 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள தாவரவியல் பூங்காவினை ஆட்சியா்ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்ா். அப்போது, மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, உதவி ஆட்சியா்(பயிற்சி) எஸ்... மேலும் பார்க்க