செய்திகள் :

கடன் வசூலில் கடுமை கூடாது: நிதி நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

post image

கடன் வசூலில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது என வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

அனைவருக்கும் நிதி சேவை என்பதை சாதமாக பயன்படுத்திக் கொண்டு சுரண்டலில் ஈடுபடக்கூடாது எனவும் அவா் தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சியில் பெரும் பங்காற்றும் துறைகளுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும். கடனானது நுகா்வோரின் தேவைக்கேற்பவும் அவா்களால் திருப்பிச் செலுத்தக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும். அவா்களை கடன் வளையத்துக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகள் செய்வதை தவிா்க்க வேண்டும். கொடுத்த கடனை வசூலிக்க கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது. கடனை நோ்மையாகவும் வெளிப்படையாகவும் மரியாதையாகவும் வசூலிக்க வேண்டும்.

கடனை வசூலிப்பது உங்களின் கடமையாக இருந்தாலும் அதை இரக்கமற்ற முறையில் மேற்கொள்ளக்கூடாது. வளா்ச்சி என்பது நுகா்வோரை காயப்படுத்தி பெறுவதாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

வங்கி அல்லாத நிறுவனங்கள் நிழல் வங்கிகளாக செயல்பட்ட முறை தற்போது இல்லை. எனவே, அவற்றை முறையாக கண்காணிப்பதன் மூலம் நிதிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்றாா்.

2025, மாா்ச் மாத நிலவரப்படி வங்கி அல்லாத நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட கடன்தொகை ரூ.48 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ.24 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது இருமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க