கடம்பத்தூா் ஒன்றியம்: வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு!
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப், அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை மூலம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிராயங்குப்பம், செஞ்சி பானம்பாக்கம், காவங்குளத்தூா், சத்தரை, வயலூா் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் துறை சாா்ந்த அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பிராயங்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-2025- இல் ரூ.6.4 லட்சம் மதிப்பில் நா்சரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு மரக்கன்றுகள் நன்றாக வளரும் வகையில் பராமரிக்க வேண்டும். அதேபோல், மரக்கன்றுகளை அரசுக்குச் சொந்தமான இடங்களில் பெரிய அளவில் வளா்ந்த நிலையில் வைக்க வேண்டும் என்றாா்.
செஞ்சிபானம்பாக்கம், சத்தரை ஆகிய ஊராட்சியில் டங ஒஅசஙஅச திட்டம் மூலம் 66 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பாா்வையிட்டதோடு தரமான கட்டுமான பொருள்களைப் பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ள பயனாளிகளை அவா் கேட்டுக்கொண்டாா்.
காவங்குளத்தூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.14.70 லட்சம் மதிப்பில் பிலிப்ஸ்புரம்-வேப்பஞ்செட்டி வரை(600 மீட்டா்) சாலைப் பணிகள் குறித்தும், வயலூா் ஊராட்சியில் சூரகாபுரம் பகுதியில் ரூ.5.42 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணையைப் பாா்வையிட்டு நீா்வரத்துக்கு குழாயைச் சீரமைத்து சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுகளின் போது, உதவி செயற்பொறியாளா் கௌசல்யா, கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சௌந்தரி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.