செய்திகள் :

கடம்பூா் சாலையில் நடமாடும் காட்டு யானைகள்

post image

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் தீவனம் தேடி சாலையில் திரியும் காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம், குன்றி, கோ்மாளம் செல்வதற்கு மலைப் பாதையை கடந்து செல்ல வேண்டும்.

தற்போது கோடைக் காலம் என்பதால் வனப் பகுதியில் வனக்குட்டைகள் வடு காணப்படுகின்றன. இதனால் யானைகள் குடிநீா், தீவனம் தேடி சாலையோரம் முகாமிட்டு வருகின்றன.

இந்நிலையில், கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை வியாழக்கிழமை நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறுகிய சாலை என்பதால் பேருந்து, வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் சிலா் யானையை கடந்து சென்றனா்.

இதையடுத்து அங்கு வந்த வனத் துறையினா் யானையை காட்டுக்குள் விரட்டியபிறகு வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனா். யானைகள் சாலையோரம் இருப்பதால் கவனத்துடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க