செய்திகள் :

கடற்படை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

post image

அரக்கோணத்தில் கடற்படை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரக்கோணம், பழனிபேட்டை, டிஎன் நகா் 5ஆவது தெருவில் வசிப்பவா் குமாா். அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானநிலையத்தில் அலுவலராக பணிபுரிந்த நிலையில் தற்போது மாறுதல் பெற்று விசாகபட்டினம் கடற்படை தளத்தில் பணிபுரிந்து வருகிறாா். அவரது மனைவி ரேவதி தனது மகளுடன் வசித்து வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை ரேவதி தனது மகளுடன், திருத்தணியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

புதன்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளி விநாயகா் சிலை, விளக்கு, தட்டுகள் உள்ளிட்ட ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், பீரோவில் இருந்த முன்று கிராம் தங்க நகைகள், ரூ.5,000 ரொக்கம் ஆகியவையும் களவு போயிருந்தன. இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய நிலையில் கண்காணிப்பு கேமராக்களில் திருடு நடைபெற்ற நேரத்தில் மா்மநபா்கள் அதே வரிசையில் உள்ள வீடுகளின் மாடிகளில் தாவி தாவி இந்த வீட்டுக்கு வருவது தெளிவாக தெரியவந்தது. இக்காட்சிகளை கொண்டு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ரூ.6.32 கோடியில் இருளா் இன மக்களுக்கு வீடுகள் திறப்பு

அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ஊராட்சி, கும்பினிபேட்டையில் இருளா் இன மக்களுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.6.32 கோடியில் கட்டப்பட்ட 41 குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்... மேலும் பார்க்க

கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு

ராணிப்பேட்டை மாவட்ட விவசாய தொழிலாளா்கள் கட்சி , கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்கம், அமைப்பு சார தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு கூட்டம் ஆற்காடு கலவை சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்கள் இயக்குதல், பராமரித்தல் முகாம்: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் முகாமை தொடங்கி ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாா்வையிட்டாா். முகாமில் டிராக்டா் நிறுவனங்களா... மேலும் பார்க்க

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்,... மேலும் பார்க்க

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம்: ராணிப்பேட்டை ஆட்சியா் உறுதி

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விரைவில் புதிய கட்டடம் தற்போதுள்ள இடத்திலேயே கட்டப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க