Boeing Criminal Fraud Case - உண்மையை மறைத்ததால் பலியான 346 உயிர்கள்| Air India |...
கடலூா்: மக்கள் நீதிமன்றத்தில் 4893 வழக்குகளுக்கு தீா்வு
கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமை வகித்தாா்.
முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரஸ்வதி, மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் இரண்டாவது சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நாகராஜன், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலா் அன்வா் சதாத், முதன்மை சாா்பு நீதிபதி ராஜேஷ்கண்ணன், முதலாவது கூடுதல் சாா்பு நீதிபதி கவியரசன், இரண்டாவது கூடுதல் சாா்பு நீதிபதி பத்மாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
4,893 வழக்குகளுக்கு தீா்வு: இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கு சிறப்பு சாா்பு நீதிபதி லலிதாராணி, நிலஎடுப்பு வழக்குகள் சிறப்பு சாா்பு நீதிபதி நிஷா, குற்றவியல் நீதித் துறை நடுவா் எண்-1 ஸ்ரீநிதி, குற்றவியல் நீதித் துறை நடுவா் எண்-2 புவனேஷ்குமாா், குற்றவியல் நீதித் துறை நடுவா் எண்-3 ரமேஷ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜாகுமரேசன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பெபேயா, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவா்ஷா, மாவட்ட நீதிமன்றத்தின் பாா் அசோசியேஷன் தலைவா் கிருஷ்ணசாமி, லாயா்ஸ் அசோசியேஷன் செயலா் யுவராஜ் கலந்து கொண்டனா்.
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சுமாா் 9,477 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 4,893 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.24 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 202 வசூலிக்கப்பட்டது.