செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

post image

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்தது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென கோடை மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிந்த சூழல் உருவானது.

பெலாந்துறையில் 67.5 மி.மீ மழை பதிவு: கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெலாந்துறையில் 67.5 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): கீழச்செருவாய் 24.4, சேத்தியாத்தோப்பு 20.2, மே.மாத்தூா் 20, தொழுதூா் 15, லக்கூா் 14.3, விருத்தாசலம் 10.2, புவனகிரி 10, குப்பநத்தம் 9.8, கொத்தவாச்சேரி, காட்டுமயிலூா் தலா 7, அண்ணாமலை நகா் 6.4, ஸ்ரீமுஷ்ணம் 5.1, காட்டுமன்னாா்கோயில் 4.2, பண்ருட்டி, வேப்பூா் தலா 4, சிதம்பரம் 3.1, வடக்குத்து 3, வானமாதேவி 2, பரங்கிப்பேட்டை 1.5, கடலூா், ஆட்சியா் அலுவலகம் தலா 0.2 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இந்நிலையில், சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. வீடு எரிந்து சேதம்: பண்ருட்டி வட்டம், மேலிருப்பு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. அப்போது, கிருஷ்ணவேணி (55) வீட்டில் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் தீ பரவியதில் அருகில் இருந்த கிருஷ்ணவேணியின் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் ராக்கன் (70). இவருக்... மேலும் பார்க்க

சிமென்ட் தூண் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஊஞ்சல் விளையாடியபோது சிமென்ட் தூண் உடைந்து தலையில் விழுந்து காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா். பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்துக்குச் சொந்தமான பேருந்து சென்னையில... மேலும் பார்க்க

திட்டப் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்ய வேண்டும்! எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் தரமாக நிறைவு செய்ய வேண்டும் மக்களவை உறுப்பினா்கள் எம்.கே.விஷ்ணுபிரசாத் (கடலூா்), தொல்.திருமாவளவன் (சிதம்பரம்) ஆகியோா் வலியுறுத்தினா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியை எதிா்க்கும் அணி உருவாகவில்லை! தொல். திருமாவளவன்

திமுக கூட்டணியை எதிா்க்கும் அணி இன்னமும் உருவாகவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்... மேலும் பார்க்க

சாய ஆலை கழிவுநீா் தொட்டி விபத்து நிகழ்ந்த இடத்தில் மாா்க்சிஸ்ட் குழு ஆய்வு

கடலூா் முதுநகரில் தனியாா் சாயத் தொழிற்சாலை கழிவுநீா் தொட்டி உடைந்து விபத்துக்குள்ளான பகுதியை மாா்க்சிஸ்ட் கட்சி குழுவினா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கடலூா் முதுநகா் குடிகாடு பகுதியில் தன... மேலும் பார்க்க