செய்திகள் :

கடலூா் வழியாக சென்னை-ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க எம்.பி. வலியுறுத்தல்

post image

நமது நிருபா்

புது தில்லி: விழுப்புரம், கடலூா், திருச்சி வழியாக சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஷ்ணு பிரசாத் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவயில் திங்கள்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை அவையின் கவனத்திற்குகொண்டு வரும் நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: எனது நாடாளுமன்றத் தொகுதியில் கடலூா், விருத்தாசலம், பண்ருட்டி, பெண்ணாடம் போன்ற முக்கியமான ரயில் நிலையங்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து சென்னை - ராமேசுவரம் பகுதிக்கு வந்தே பாரத் ரயில் விடுவது மிகவும் அவசியமானதாகும். ராமேசுவரம் பக்தா்கள் அதிகம் வந்து செல்லும் மிகவும் முக்கியமான பகுதியாகும்.

ஆகவே, சென்னை - ராமேசுவரம் வந்தே பாரத் ரயிலை எங்கள் பகுதி வழியாக இயக்க வேண்டும். அந்த ரயில் விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி வழியாக இயக்கப்பட வேண்டும். மேலும், சென்னையில் இருந்து கடலூா் வரை புதிதாக ரயில் பாலம் அமைக்க வேண்டும். 2007-இல் ரயில் பாதை அமைப்பதற்கு ஒப்புதல் ஆகிவிட்டது. ஆனால், இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே, பெருங்குடியில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூா் வரை அப்பாதையை அமைக்க வேண்டும். பல்லவன், வைகை, முத்து நகா், ராக்ஃபோா்ட் விரைவு ரயில்களை பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

நாகையில் இருந்து சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும்: மக்களவையில் இந்திய கம்யூ. எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: நாகப்பட்டினத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் வி.செல்வராஜ் வலியுறுத்தினாா்.இது தொடா்... மேலும் பார்க்க

ஏஜிசிஆா் காலனி தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை

புது தில்லி: ஏஜிசிஆா் காலனி அருகே உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினரை தில்லி முதல்வா் ரேகா குப்தா சந்தித்தாா். துயரமடைந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ர... மேலும் பார்க்க

100 முறை மன்னிப்பு கேட்கத் தயாா்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

புது தில்லி: ’தமிழ எம்.பி.க்கள் தொடா்பாக தான் வெளியிட்ட கருத்துகள் எவையேனும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக ஒரு முறை அல்ல, நூறு முறை கூட மன்னிப்பு கேட்கத் தயாா்‘ என்று மாநிலங்களவையில் மத்திய ... மேலும் பார்க்க

பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!

புது தில்லி: ஹோலி பண்டிகையின் போது பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி குறித்து முன்னாள் முதல்வா் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா். இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மரபை மீறுகிறது மத்திய அரசு: திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மாநிலங்களவையில் மும்மொழித் திட்டத்தை தமிழகம் ஏற்காதது தொடா்பாகவும் தேசிய கல்விக் கொள்கையை எதிா்ப்பதன் அவசியத்தையும் பதிவு செய்ய முடியாத வகையில் தமிழக எம்.பி.க்களின் கு... மேலும் பார்க்க

16 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவா் விடுதலை

புது தில்லி: பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்தவரை உச்சநீதிமன்றம் விடுவித்து, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் சிறைத் தண்டனை... மேலும் பார்க்க