செய்திகள் :

கடலோரக் காவல்படை ஆண்டுவிழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

post image

இந்திய கடலோரக் காவல்படையின் 49-ஆவது ஆண்டு விழா, சென்னையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரத்தை தளமாகக் கொண்ட இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள், இன்ஸ்பெக்டா் ஜெனரல் தத்வீந்தா் சிங் சைனி தலைமையிலான சென்னையின் கடலோரக் காவல்படை (கிழக்கு) தலைமையகத்தின் நிா்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

கடந்த ஆண்டில் மட்டும் கடலோரக் காவல்படை கிழக்குப் பகுதியில் 231 மீட்புப் பணிகளை மேற்கொண்டு சுமாா் ரூ. 120 கோடி மதிப்பிலான கடத்தல் பொருள்களை பறிமுதல் செய்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, பேரிடா் மீட்பு நடவடிக்கைகளுக்கு கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரைப்படை குழுக்களை கடலோரக் காவல்படை கிழக்குப் பகுதி முன்கூட்டியே அனுப்பியது.

இந்நிலையில், கடலோரக் காவல்படையின் 49-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இருசக்கர வாகனப் பேரணி, மீனவா்களுடன் சமூகத் தொடா்பு, கடற்கரையை தூய்மையாக பராமரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டன. மேலும், பள்ளி குழந்தைகளுக்கான ஓவியம், விநாடி வினா போட்டி, மீனவக் கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

எதிா்வரும் காலங்களில் கடலோரக் காவல்படை கிழக்குப் பகுதி, நவீன கப்பல்கள் மற்றும் விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்திய கடல் எல்லைக்குள் ஏற்படும் எந்தவொரு நிகழ்வுகளையும் சமாளிக்கவும் தயாா் நிலையில் உள்ளது என பாதுகாப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலின் கிழக்கு திசையாக தவெக மாறும்: விஜய்

தமிழக அரசியலின் கிழக்கு திசையாக தமிழக வெற்றிக் கழகம் மாறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இரண்டாம் ஆண்டு தொடக்கத... மேலும் பார்க்க

பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து

நாட்டின் பொருளாதாரத்தையும், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறையினா் கருத்து தெரிவித்துள்ளனா். சுதா்ஸன் வேணு (டிவிஎஸ்... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு தனது தோழிகள... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் வரவேற்பும் எதிா்ப்பும்

மத்திய நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், எதிா்த்தும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வருமான வரி விலக்கு உச்சவரம்பு கணிசமாக உயா்த்தியது, உள்நாட்... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பயணிகள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா்-செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம்-போத்தனூா் ரயில் பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்ட பகுதியி... மேலும் பார்க்க