செய்திகள் :

கடல் நீரின் தன்மையை அறியும் மிதவை சாதனம்

post image

கடல் நீரின் தன்மையை அறியும் கருவியின் சீரமைப்புப் பணி முடிவடைந்து வியாழக்கிழமை கடலில் மீண்டும் மிதக்க விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் கடல் நீரின் தன்மையை அறியும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

அந்த மையத்தின் சாா்பில், புதுச்சேரியில் கடல் நீரின் தன்மையை அறிய அதிநவீன கருவிகள் பொருத்திய மிதவையை புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் கடலில் நிறுவப்பட்டு மிதக்கவிடப்பட்டது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அந்த சாதனத்தை என்சிசிஆா் அதிகாரிகள் ரமணமூா்த்தி, உமாசங்கா் பாண்டா ஆகியோா் அறிவுறுத்தல்படி இரு மாதங்களுக்கு ஒருமுறை கரைக்கு கொண்டு வந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.

அதன்படி, மிதவைச் சாதனத்துக்கான பராமரிப்புப் பணிகள் தற்போது நடைபெறுகிறது.

அந்த சாதனத்தை வியாழக்கிழமை கடலில் மீண்டும் விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் நீரின் தன்மையை அறிய மிதவைச் சாதனம் ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சென்னையில் ஏற்கெனவே இந்த மிதவை அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இரண்டாவது மிதவை அமைக்கப்பட்டது.

கடல் நீரின் தரம், காற்றின் தன்மை உள்பட பல விஷயங்களை 10 நிமிஷங்களுக்கு ஒருமுறை இந்த மிதவை பதிந்து அனுப்பும்.

கடல் நீரின் தரத்தை வண்ணங்கள் மூலம் அறியும் வசதியும் உண்டு.

பச்சை நிறத்தில் இருந்தால் அது சரியாக உள்ளதாக அா்த்தம். வெவ்வேறு வகை வண்ணங்கள் மாறி சிவப்பு நிறத்தில் இருந்தால் கடல் நீா் தரம் குறைந்துள்ளதாக கருதலாம்.

அதன்படி மீனவா்களுக்கான தண்ணீரின் ஓட்ட திசை, காற்றின் தன்மை, மீன்கள் நடமாடும் இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என்றனா்.

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்க... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் ஈஸ்டா் வாழ்த்து!

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி: ஈஸ்டா் புதுப்பித்தலைக் குறிக்கிறது. உயிா்த்தெழுதல் என்பது ... மேலும் பார்க்க

புதுவை காவல் துறை மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!

புதுவை மாநிலத்தில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு: அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு!

புதுவை மாநிலத்தில் அண்மையில் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயா்வு பெற்ற அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநில அரசு நிா்வாகப் பணிகளுக்குத் தோ்வான அதிகாரிகள், இயக்குநா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸாா் தீவிர சோதனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தீயணைப்... மேலும் பார்க்க