செய்திகள் :

கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!

post image

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வற்ற தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்தது.

இந்த பனிமூட்டத்தால் ஏற்காடு முழுவதும் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கடும் பனி சூழ்ந்து 5 அடி தூரத்தில் இருப்பதுகூட தெரியாத சூழல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை சரியான அளவில் தெரியாததால் வாகனத்தின் முகப்பு விளக்கை எறியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

மேலும், கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. ஏற்காட்டைச் சூழ்ந்த கடும் பனி மூட்டத்தாலும் மழையாலும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் ஏற்காட்டிற்குச் சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவிலேயே வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் குளுகுளுவென மாறிய ஏற்காட்டில் உள்ள முக்கிய இடங்களைச் சுற்றிப்பார்த்து மகிழ்கின்றனர்.

ஏற்காடு படகு இல்லம் சென்ற சுற்றுலாப் பயணிகள் படகில் சவாரி செய்தவாறு ஏரியைச் சூழ்ந்த பனிமூட்டத்தைக் கண்டு ரசித்தனர். மேலும் சூழல் சுற்றுலாப் பூங்காவிற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சாகச விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர். தொடர்ந்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு!

ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், ... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து; ஒருவர் காயம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்க... மேலும் பார்க்க

1000 பேருக்கு மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டைகள்!

மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.மகளிர் நாளையொட்டி, கடந்த வாரம் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெய்யில் குறையும்!

தமிழகத்தில் இன்று வெப்பநிலை குறையக்கூடும் என்றும் நாளை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மே... மேலும் பார்க்க

'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால்..' - உதயநிதி பேச்சு!

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்திய தமிழ்நாடு, தற்போது தொகுதி மறுசீரமைப்பினால் வஞ்சிக்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தி... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில்!

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ண... மேலும் பார்க்க