செய்திகள் :

`கடும் மோதல்' வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் F-16 போர் விமானம்!

post image

பாகிஸ்தானின் அதிவேக சூப்பர்சோனிக் விமானமான  F-16 போர் விமானத்தை இந்தியாவின் தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகள் வீழ்த்தியுள்ளதாக என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரில் விமான நிலையத்தைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட F-16 போர் விமானத்தை இந்தியா வீழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமான சர்கோதா விமான தளத்தில் இருந்து இந்த விமானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்கோதா தளத்துக்கு அருகாமையிலேயே Surface-to-air missile மூலம் இதனை சுட்டு வீழ்த்தியுள்ளது இந்தியப் படை.

பாகிஸ்தான் விமானப்படையில் சீனா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்ளன. இவற்றுள் மிகவும் முக்கியமானது F-16 வகை விமானங்கள்.

கடும் மோதல்

பாகிஸ்தான் ராணுவம் ஜம்முவில் உள்ள ஆர்.எஸ். புரா, அர்னியா, சம்பா மற்றும் ஹிராநகர் ஆகிய பகுதிகளில் தீவிரமாக குண்டுமழைப் பொழிந்து வருகிறது.

பஞ்சாப் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதான்கோட் நகரில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. சண்டிகரில் அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க

300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ தளங்களைக் குறிவைத்து 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விங் ... மேலும் பார்க்க

``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அரசு தகவல்!

நேற்றைய இரவு பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் தீவிரமான துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரம் மற்றும் தயாரிப்புகள் குறித்து விளக்க இந்... மேலும் பார்க்க

Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் ஆந்திர பிரதேசம் மாநிலம், ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டல் பகுதியில் புட்டகுண்டலபள்ளேகிராமத்துக்கு அருகில் உள்ள கல்லி தண்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீர... மேலும் பார்க்க

Operation Sindoor: பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதல்; முறியடித்த இந்தியா - ராணுவம் சொல்வதென்ன?

அணு ஆயுத பலம் பொருந்திய இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு (08/05/2025) மற்றும் இன்று காலையில் (09/05/2025) ட்ரோன்கள் மற்றும் பிற... மேலும் பார்க்க