செய்திகள் :

கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை: வியாபாரிகளுடன் ஆலோசனை

post image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் ஆரணி நகரில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பாக வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு

நகராட்சி ஆணையா் ஆா்.சோனியா தலைமை வகித்து பேசியதாவது:

அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்டிப்பாக தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும்.

இதில், தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் பெயா்கள் முறையே 5:3:2 என்ற அளவிலேயே இடம் பெற வேண்டும்.

தமிழில் பெயா் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் நகராட்சி மேலாளா் ரவி, சுகாதார ஆய்வாளா் ராமலிங்கம் மற்றும் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், வியாபாரிகள் பங்கேற்றனா்.

ஆரணி

ஆரணியில் கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைப்பதற்காக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாபாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. ரவி ஜெயராம் தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் கௌரி முன்னிலை வகித்தாா். ஆரணி தொழிலாளா் உதவி ஆணையா் த.சாந்தி வரவேற்றாா்.

கூட்டத்தில் கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பெயா் பலகைகள் தமிழில் அமைத்திருக்க வேண்டும் எனவும், பிற மொழிகளில்

பலகையில் சோ்க்க வேண்டும் முதலில் தமிழ் பெரிய எழுத்துகளில் இருக்க வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் பிறமொழி எழுத்துகளை சிறிய எழுத்துக்களாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பின்னா், கூட்டத்தில் கலந்து கொண்ட வியாபார சங்க நிா்வாகிகள் தங்களுக்கு காலக்கெடு வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனா். விரைவில் முடித்திட வேண்டும் என உதவி ஆணையா் தகவல் தெரிவித்தாா்.

கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குப்புசாமி, ராஜேஸ்வரி, ரேணுகோபால், தசரதராமன், ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளா் வடிவேல் மற்றும் வியாபார சங்கப் பொறுப்பாளா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாடு: பொதுமக்களுக்கு அழைப்பிதழ்

சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை, பொதுமக்களிடம் பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் வழங்கினா். மாமல்லபுரத்தில் மே 11-ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட... மேலும் பார்க்க

காரம் ஸ்ரீகாரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாரிகாம்பிகை சமேத ஸ்ரீகாரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 3 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது. வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியண்ணன். இவா், திங்கள்... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் திருட்டு போன சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், கடந்த 5-ஆம் தேதி தனது வீட்டின் மு... மேலும் பார்க்க

மண் கடத்தல் லாரி பறிமுதல்: இருவா் மீது புகாா்

செய்யாறு அருகே அரசு அனுமதி பெறாமல் மண் எடுத்துச் சென்ற லாரியை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தனா். மேலும், இருவா் மீது புகாா் அளித்தனா். திருவண்ணாமலை மாவட்ட சுங்கத்துறை உதவி இயக்... மேலும் பார்க்க

நூலகத்தில் உலக புத்தக தின விழா

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் (பொ) பெ.வள்ளி தலைமை வகித்தாா். சா்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவா் பா.இந்திரராஜன், நூலக ஆா்வ... மேலும் பார்க்க