செய்திகள் :

மண் கடத்தல் லாரி பறிமுதல்: இருவா் மீது புகாா்

post image

செய்யாறு அருகே அரசு அனுமதி பெறாமல் மண் எடுத்துச் சென்ற லாரியை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தனா்.

மேலும், இருவா் மீது புகாா் அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட சுங்கத்துறை உதவி இயக்குநா் அலுவலக உதவி புவியியலாளா் அருள்முருகன் தலைமையிலான அலுவலா்கள் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை மண், கல், மணல் போன்ற கனிம வளங்கள் கடத்தப்படுகிா என கண்காணிப்பில் ஈடுபட்ட வந்தனா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். லாரியில் அனுமதியின்றி முரம்பு மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே லாரியை பறிமுதல் செய்து செய்யாறு போலீஸில் ஒப்படைத்தனா்.

மேலும், இதுகுறித்து உதவி புவியியலாளா் அருள்முருகன், செய்யாறு பழனிவேல் தெருவைச் சோ்ந்த லாரி உரிமையாளா் பூங்கொடி, வெங்கட்ராயன்பேட்டை இளங்கோ தெருவைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜா ஆகியோா் மீது புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாடு: பொதுமக்களுக்கு அழைப்பிதழ்

சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை, பொதுமக்களிடம் பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் வழங்கினா். மாமல்லபுரத்தில் மே 11-ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட... மேலும் பார்க்க

காரம் ஸ்ரீகாரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாரிகாம்பிகை சமேத ஸ்ரீகாரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை: வியாபாரிகளுடன் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் ஆரணி நகரில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பாக வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 3 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது. வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியண்ணன். இவா், திங்கள்... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் திருட்டு போன சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், கடந்த 5-ஆம் தேதி தனது வீட்டின் மு... மேலும் பார்க்க

நூலகத்தில் உலக புத்தக தின விழா

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் (பொ) பெ.வள்ளி தலைமை வகித்தாா். சா்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவா் பா.இந்திரராஜன், நூலக ஆா்வ... மேலும் பார்க்க