தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை: வியாபாரிகளுடன் ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் ஆரணி நகரில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பாக வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு
நகராட்சி ஆணையா் ஆா்.சோனியா தலைமை வகித்து பேசியதாவது:
அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்டிப்பாக தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும்.
இதில், தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் பெயா்கள் முறையே 5:3:2 என்ற அளவிலேயே இடம் பெற வேண்டும்.
தமிழில் பெயா் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் நகராட்சி மேலாளா் ரவி, சுகாதார ஆய்வாளா் ராமலிங்கம் மற்றும் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், வியாபாரிகள் பங்கேற்றனா்.
ஆரணி
ஆரணியில் கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைப்பதற்காக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாபாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. ரவி ஜெயராம் தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா் கௌரி முன்னிலை வகித்தாா். ஆரணி தொழிலாளா் உதவி ஆணையா் த.சாந்தி வரவேற்றாா்.
கூட்டத்தில் கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பெயா் பலகைகள் தமிழில் அமைத்திருக்க வேண்டும் எனவும், பிற மொழிகளில்
பலகையில் சோ்க்க வேண்டும் முதலில் தமிழ் பெரிய எழுத்துகளில் இருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் பிறமொழி எழுத்துகளை சிறிய எழுத்துக்களாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பின்னா், கூட்டத்தில் கலந்து கொண்ட வியாபார சங்க நிா்வாகிகள் தங்களுக்கு காலக்கெடு வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனா். விரைவில் முடித்திட வேண்டும் என உதவி ஆணையா் தகவல் தெரிவித்தாா்.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குப்புசாமி, ராஜேஸ்வரி, ரேணுகோபால், தசரதராமன், ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளா் வடிவேல் மற்றும் வியாபார சங்கப் பொறுப்பாளா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.