செய்திகள் :

பைக் திருட்டு: இளைஞா் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் திருட்டு போன சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரணமல்லூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், கடந்த 5-ஆம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லையாம். பைக்கை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சுரேஷ் தனது உறவினருடன் ராணிப்பேட்டை மாவட்டம், புதுப்பாடி வழியாக பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தனது பைக்கில் ஒருவா் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருப்பதைப் பாா்த்தாா்.

உடனே சுரேஷும், அவரது உறவினரும் சோ்ந்து அவரை மடக்கிப் பிடித்து பெரணமல்லூா் போலீஸில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்டவா் வாலாஜா வட்டம், சாத்தம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சத்தியன் (30) என்பதும், இவா் சுரேஷின் பைக்கை திருடிச் சென்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் லதா வழக்குப் பதிந்து சத்தியனை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாடு: பொதுமக்களுக்கு அழைப்பிதழ்

சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை, பொதுமக்களிடம் பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் வழங்கினா். மாமல்லபுரத்தில் மே 11-ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட... மேலும் பார்க்க

காரம் ஸ்ரீகாரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாரிகாம்பிகை சமேத ஸ்ரீகாரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை: வியாபாரிகளுடன் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் ஆரணி நகரில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பாக வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 3 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது. வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியண்ணன். இவா், திங்கள்... மேலும் பார்க்க

மண் கடத்தல் லாரி பறிமுதல்: இருவா் மீது புகாா்

செய்யாறு அருகே அரசு அனுமதி பெறாமல் மண் எடுத்துச் சென்ற லாரியை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தனா். மேலும், இருவா் மீது புகாா் அளித்தனா். திருவண்ணாமலை மாவட்ட சுங்கத்துறை உதவி இயக்... மேலும் பார்க்க

நூலகத்தில் உலக புத்தக தின விழா

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் (பொ) பெ.வள்ளி தலைமை வகித்தாா். சா்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவா் பா.இந்திரராஜன், நூலக ஆா்வ... மேலும் பார்க்க