செய்திகள் :

கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

post image

நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயிா் சாகுபடிக்காக ஜூன் 12- ஆம் தேதி, மேட்டூா் அணை திறக்கப்பட்டது. வழக்கமாக மேட்டூரில் அணையிலிருந்து கடைமடை பகுதிக்கு தண்ணீா் வந்துசேர 15 முதல் 20 நாள்கள் வரை ஆகும்.

ஆனால், நிகழாண்டு மேட்டூா் அணை திறக்கப்பட்டு 10 நாள்களே ஆன நிலையில், கடைமடை மாவட்டமான நாகையின் பெரும்பாலான பகுதிகளை காவிரி நீா் வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், கடைமடை பகுதிகளுக்கு வந்த காவிரி நீரை வரவேற்று வருகின்றனா்.

அந்த வகையில், நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதி நீா் இயக்கு அணையான, நரியங்குடி ஓடம்போக்கி ஆற்றில் வந்து சோ்ந்த காவிரி நீரை பொதுமக்களும், விவசாயிகளும் ஆரத்தி எடுத்தும், மலா்கள் மற்றும் நெல்மணிகளை தூவியும் வரவேற்றனா். இதில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளா் காவிரி தனபாலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, பெண்கள் கும்மியடித்து, பாட்டுப்பாடி காவிரித்தாயை வணங்கினா்.

காவிரி நீா் கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால், நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் எனவும், இதன் மூலம் விவசாயத் தொழிலாளா்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் தவிா்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்த விவசாயிகள், தமிழக அரசு விவசாயத்திற்கு தேவையான விதைநெல், உரம் மற்றும் குறுவை சாகுபடி தொகுப்பு உள்ளிட்டவைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

நரியங்குடி ஓடம்போக்கி ஆற்றில் மலா்கள் மற்றும் நெல்மணிகளைத் தூவி காவிரி நீரை வரவேற்ற விவசாயிகள்.

நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 29 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்

நாகப்பட்டினம்: திருச்சி- காரைக்கால் - திருச்சி ரயில்கள், திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்த... மேலும் பார்க்க

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

உத்தமசோழபுரம் தடுப்பணை திட்டத்தை பூதங்குடிக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் அமைக்கப்பட உள்ள தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன்... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் ஜூலை 7-இல் கும்பாபிஷேகம்

பூம்புகாா்: நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமான திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கோயிலில், சிவனின் 5 முகங்களில் ஒன்றா... மேலும் பார்க்க